Enthan Inbam Kollai

Enthan Inbam Kollai Song Lyrics In English


இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கு மா பாலசுப்ரமண்யம்

ஸ்ரீராமன் மீதிலேபேராசை மீறியே சீதை போல் சூர்ப்பனகை உருமாறினாள் நேராகவே அந்த நிலை கண்ட ஜானகி நெஞ்சம் கலங்கியே தடுமாறினாள்

எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ வஞ்சனையாலே வலை வீசியே எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ

மனம் நாடும் மாறனை மணமாலை சூடி மனம் நாடும் மாறனை மணமாலை சூடி மகிழ்வுடன் வாழ்வில் ஒன்றாய் காதல் கீதம் பாடி மகிழ்வுடன் வாழ்வில் ஒன்றாய் காதல் கீதம் பாடி இன்பம் பறிபோனதால் ஏங்கி வாடுறேனே


எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ வஞ்சனையாலே வலை வீசியே எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ தாலிக் கட்டிக் கொண்டவளை தனிமையிலே தவிக்க விடும் பாதகி நீ பெண்ணா????? பேயா????

சொந்தமாய் என் நாதனோடு உறவாடல் ஏனோ சொந்தமாய் என் நாதனோடு உறவாடல் ஏனோ எந்தன் வாழ்வை நாசம் செய்து இன்பம் காணத்தானோ எந்தன் வாழ்வை நாசம் செய்து இன்பம் காணத்தானோ உண்மையான காதலின் உள்ளம் வேகலாமோ

எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ வஞ்சனையாலே வலை வீசியே எந்தன் இன்பம் கொள்ளை கொள்ள வந்த நீலி யாரோ வந்த நீலி யாரோ