Kaadhal Kaadhal

Kaadhal Kaadhal Song Lyrics In English


காதல்காதல்காதல் ம்ம்ஹூம்காதல்காதல்காதல்

ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம் கற்று தந்தது காதல் உன்னை என்னை அன்னை தன்னை பெற்றுத் தந்தது காதல் காதல்காதல்காதல்

காதல்காதல்காதல்

மேகத்தில் தூங்கும் நீரினை போலே வெளித் தெரியாது இது ஒரு காதல் பூனைக்கு கூட புடவையிருந்தால் புத்தி தடுமாறும் இது ஒரு காதல்

காதல் என்பது தெய்வீகமா காவியம் எல்லாம் பொய் சொல்லுமா காதல் என்பது கற்பனையா காமத்துக்கது ஒப்பனையா காதல் என்ற வார்த்தை அவசிய பொய்யா காதல் என்ற வார்த்தை அவசிய பொய்யா

காதல்காதல்காதல்

ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம் கற்று தந்தது காதல் உன்னை என்னை அன்னை தன்னை பெற்றுத் தந்தது காதல் காதல்காதல்காதல்


வரங் கொண்ட சாமி வழி மறந்தாலும் தவங் கொண்டு வாழும் இது ஒரு காதல் கறக்கின்ற போது சுரக்கின்ற பால் போல் கடமையில் தோன்றும் இது ஒரு காதல்

பார்வைக்கு நரைகள் விழுந்த பின்னும் பருவத்தின் தேவை கழிந்த பின்னும் எரிகின்ற பிரச்சனை தடுக்கையிலும் தோளுக்கு மேல் பிள்ளை இருக்கையிலும் கிழடுகள் பாடும் இது ஒரு காதல் கிழடுகள் பாடும் இது ஒரு காதல்

காதல்காதல்காதல்

ஆதாம் ஏவாள் உலகுக்கெல்லாம் கற்று தந்தது காதல் உன்னை என்னை அன்னை தன்னை பெற்றுத் தந்தது காதல் காதல்காதல்காதல்

காதல்காதல்காதல் ம்ம்ஹூம்காதல்காதல்காதல்