Kuzhanthai Valarvathu Anbile |
---|
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
புத்தம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி
ஹா ஆஅஆஅ குழந்தை வளர்வது அன்பிலே நல்ல குழந்தை வளர்வது அன்பிலே நல்ல குணங்கள் அமைவது பண்பிலே குழந்தை வளர்வது அன்பிலே நல்ல குணங்கள் அமைவது பண்பிலே குழந்தை வளர்வது அன்பிலே
ஆடி நடந்திடும் ஆசையிலே அது ஓடித் தவழ்வது மண்ணிலே ஆடி நடந்திடும் ஆசையிலே அது ஓடித் தவழ்வது மண்ணிலே ஆகாய நிலவின் அசைந்தாடும் மலரின் அழகையும் காண்பது கண்ணிலே பெரும் ஆனந்தம் அடைவது பண்ணிலே
குழந்தை வளர்வது அன்பிலே நல்ல குணங்கள் அமைவது பண்பிலே குழந்தை வளர்வது அன்பிலே
கொஞ்சும் குரலும்பிஞ்சு விரலும் குளறிப் பேசும் நிலையும் மாறி கொஞ்சும் குரலும்பிஞ்சு விரலும் குளறிப் பேசும் நிலையும் மாறி அஞ்சும் மனமும் நாணமும் வந்து ஆடையணிந்திடும் அறிவும் வந்து அஞ்சும் மனமும் நாணமும் வந்து ஆடையணிந்திடும் அறிவும் வந்து நாளும் நகர்ந்ததுமே ஓடவே கல்வி ஏடும் நகர்ந்திடும் கூடவே
குழந்தை வளர்வது அன்பிலே நல்ல குணங்கள் அமைவது பண்பிலே குழந்தை வளர்வது அன்பிலே
ஆஅஆஆஆஆஆஆஅ காலத் தாமரை போலத் தோன்றும் நிறமாகியே வானத் தாரகை நாணத் தோன்றும் முகமாகியே வஞ்சிக் கொடிதனை மிஞ்சித் திகழும் வடிவாகியே வண்ணத் தங்கம் மங்கத் திகழும் வயதாகியே அறிவாகியே ஒளியாகியே தெளிவாகியே
அன்புத் திருமணியே அகமலரே அருள் மணமே அறமே போற்றி!ஆஅ புண்பட்டு உழலுகின்ற புவி திருத்த அவதரித்த பொருளே போற்றி
கண் பெற்றும் பார்வை பெறா வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி! இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த புத்தமுதே போற்றி!