Nalla Vakku Sonnal |
---|
இசை அமைப்பாளர் : எம் எஸ் விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
விண்ணாகி மண்ணாகி கனல் புனல் காற்றாகி பெண்ணாகி உலவுகின்ற பெரிய சக்தியே பெரிய சக்தியே சிறு புல்லாகி பூண்டாகி பல வகை உயிராகி எல்லாமும் காத்தருளும் அரிய சக்தியே
நல்ல வாக்கு சொன்னால் பலித்து விடும் நாக்குடையாளே அருள் நோக்குடையாளே நகை பூக்கும் முகம் காக்கும் கரம் நான்குடையாளே தெய்வ நாயகியாளே செல்வ நாயகியாளே
ஆதியில்லை அந்தமில்லை கருவில் உருவில் வந்ததில்லை ஆதியில்லை அந்தமில்லை கருவில் உருவில் வந்ததில்லை அடி எதுவோ முடி எதுவோ மூவரும் தேவரும் கண்டதில்லை
பாம்பணியும் சாம்பசிவன் பாதியில் மேவிய பைரவியே பெண்ணுருவில் கண்ணெதிரில் மடிமிசை மேவிடும் பூரணியே பத்ரகாளியம்மா நீலியம்மா சூலியம்மா திரு வீதிவுலா தேடி வரும் ஜோதியம்மா திரு வீதிவுலா தேடி வரும் ஜோதியம்மா
ஆரத்தி நீர் கரைத்தெடுத்து திருத் தாள் மலரடி சேர்த்திருக்க மாவிளக்கு ஏற்றி வைத்து திரு முகமே பார்த்திருக்க
பன்னீரும் சந்தனமும் தலை முதல் கால் வரை சாத்திருக்க பம்பையுடன் உடுக்கைகளும் ஓம் சக்தி ஓம் சக்தி என வாழ்த்திருக்க
நவக் கோணத்தில் குடியிருக்கும் குலமாரி திருவேற்காட்டில் வீற்றிருக்கும் மங்கல மாயி திருவேற்காட்டில் வீற்றிருக்கும் மங்கல மாயி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்!