Nyayam Kidaikamal |
---|
நியாயம் கிடைக்காமல் நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்ன ஆனாலும் என்றும் உன்னை விடவும் மாட்டேன் இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும் சபைய கூட்டுவேன்
காதல் கதைகளை மறந்ததென்ன கையில் கொடுத்த பின் பறந்ததென்ன உந்தன் முகத் திரை விலக்க வந்தேன் உண்மை முழுவதும் விளக்க வந்தேன்
நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும் சபைய கூட்டுவேன்
உடம்பை மூடும் புடவை மனதை மூடுமா நடந்து போன கதையை மறக்கக் கூடுமா விளக்கை கூட இருட்டில் மறைக்கப் பார்க்கிறாய் வெளிச்சம் வந்த பிறகும் இருட்டில் வாழ்கிறாய்
கட்டில் இடு மாமா என்றாய் காதல் சுகம் தா தா என்றாய் அத்தனையும் பொய்யா எந்தன் கண்ணே கண்ணம்மா துஷ்யந்தனே பெண்ணாகி நீ வந்தாயடி
நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்ன ஆனாலும் என்றும் உன்னை விடவும் மாட்டேன்ஏஏ
சிரித்து என்னை மயக்கி வளைத்து போட்டதேன் சுகத்தை பார்த்த பிறகு மறந்து போனதேன் பசியில் வாடும் மழலை முகத்தைப் பாரடி இதற்கு யாரு பொறுப்பு பதிலை கூறடி
நீ படித்த பாடம் என்ன வாங்கி வந்த பட்டம் என்ன பிள்ளைக்கொரு தாயாய் இரு கண்ணே கண்ணம்மா மண ஊர்வலம் இனிதே வரும் திருநாள் வரும்
நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்ன ஆனாலும் என்றும் உன்னை விடவும் மாட்டேன் இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும் சபைய கூட்டுவேன்
காதல் கதைகளை மறந்ததென்ன கையில் கொடுத்த பின் பறந்ததென்ன உந்தன் முகத் திரை விலக்க வந்தேன் உண்மை முழுவதும் விளக்க வந்தேன்
நியாயம் கிடைக்காமல் இடத்தை விட்டு நகர மாட்டேன் இந்த ஊரெங்கும் வீதி எங்கெங்கும் சபைய கூட்டுவேன்