Oru Thaali Varam

Oru Thaali Varam Song Lyrics In English


கோல விழியம்மா ராஜ காளியம்மா பாளையத் தாயம்மா பங்காரு மாயம்மா முத்து மாரியம்மா பத்ர காளியம்மா முண்டக் கன்னியம்மா எங்க சென்னியம்மா

குங்கும கோதையே அன்னையே சோதையே செந்தூர தெய்வானை சிங்கார பூபதி அன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி சுந்தர நீலியே சௌந்தர மாளியே

வல்லியம்மா எங்கள் அல்லியம்மா தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா அடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா அருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா

சிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா மண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி மருவத்தூர் அம்மாவே வா

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா

குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா

மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன் மடியேந்தி பிச்சை கேட்கிறேன் அம்மா மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்

ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா

காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு வாதாட சாட்சி ஏதம்மா ஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா நான் வாழ நீதி கூறம்மா

சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில் சோகங்களை துரோகங்களை தீர்த்துவிடு என் வழியில்

வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா வாசல் வந்த பிள்ளை மனம் வாடலாமா பொன்னியம்மா அகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா

திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா மாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்


கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா துளுக்கானத்தம்மாவே துர்க்கை அம்மாவே முக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே எல்லை அம்மாவே கங்கை அம்மாவே நாச்சியம்மா தங்க பேச்சியம்மா

அன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா தூய பச்சையம்மா வீர படவேட்டம்மா பைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி அம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா ஆதி பராசக்தியே

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும் நீதானே பூமி மீதிலே ஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள் வீழாதோ உந்தன் காலிலே

பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு உன் நீதி பூமியில் தவறாகுமா என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா

தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா தெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா அர்த்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா

வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி வேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே

மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி சக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி மாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ சோலையூர் மகாமாயி வா

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்

ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா கண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா

குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு சோதனைகள் எதுக்கு அவர் கட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும் காவல் கொடு எனக்கு நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை நீ வந்து மாற்றிடம்மா

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்