Paaru Thambi Paaru |
---|
ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ எஹேஹேஏஏ ஓஹ்ஹோ
பாரு தம்பி பாரு பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு ஊரு நல்ல ஊரு உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு
வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான் அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான் இது மானம் காக்கும் காந்தி தேசமடா ஓஹ்ஹோ ஹோ ஹோ நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா ஓஹ்ஹோ ஹோ ஹோ
பாரு தம்பி பாரு பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு
கூலிக்கு உழைப்போம் ஊருக்கு கொடுப்போம் வேர்வைக்கு எங்கள் நாட்டில் மதிப்பிருக்கு பேசிடும் மொழிகள் ஆயிரம் இருக்கு ஆனாலும் சிந்தனைகள் ஒன்று நமக்கு
கற்புள்ள காதல்கள் இங்கு இருக்கு வீரமும் மானமும் கண்கள் நமக்கு காமராஜர் வாழ்ந்து சென்ற பூமியல்லவா தீயில் இன்று பூப் பறித்த தேசமல்லவா
ஏய் பாரு தம்பி பாரு பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
அஹ நம்பிக்கை இருந்தா நாளைகள் உனக்கு பூமிக்குள் ஏழைக்கொரு பங்கு இருக்கு கூண்டுக்குள் கிடந்தா ரெக்கைகள் எதற்கு பக்கத்தில் உனக்கொரு வானம் இருக்கு
பூவுக்குள் இன்றைக்கும் கத்தி முளைக்கும் சத்தியம் அன்றைக்கே கண்ணை திறக்கும் கொட்டுகின்ற கண்ணீர் என்ன கொஞ்ச நெஞ்சமா அறிஞர் அண்ணா வாழ்ந்த நாட்டில் அன்பு பஞ்சமா
பாரு தம்பி பாரு பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு ஊரு நல்ல ஊரு உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு
வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான் அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான் இது மானம் காக்கும் காந்தி தேசமடா ஓஹ்ஹோ ஹோ ஹோ நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா ஓஹ்ஹோ ஹோ ஹோ