Ponnil Vaanam |
---|
ஆஅஆஅஆஆ
ஆஆஆஅஆஅ
ஆஆஆஅஆஆஅ
பொன்னில் வானம்
போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை
காட்டுது ஜாலங்களே
காலையிலே சோலையிலே
கண்படும் வேளையிலே
பொன்னில் வானம்
போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை
காட்டுது ஜாலங்களே
மூடிய விழி திறந்து
புவி முழுவதிலும் பறந்து
தேடிய சுக மருந்து இது
தெய்வம் தரும் விருந்து
பூவினில் பல வண்ணங்கள்
போய் வருகுது எண்ணங்கள்
நாவினில் பல சந்தங்கள்
நம் பரம்பரை சொந்தங்கள்
நடக்குது நாடகங்கள் ஆ
பொன்னில் வானம்
போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை
காட்டுது ஜாலங்களே
தாம் தகிட தீம் என்று
நதிகள் ஓடி ஆட
தா தநிஸபா என்று
ஸ்வரங்கள் காற்று பாட
நீரலையில் ஓடி தினம்
நெளிந்து மீன்கள் ஆட
கேள் எனது பாடல் என
கிளையில் குயில்கள் பாட
தாமரை மலர் நீர் தொட்டு
தாள ஜதிகள் போட
பூமகள் அவள் கைப்பட்டு
பூவின் இனங்கள் பாட
பூவினில் தேன் எடுக்கும்
வண்டு ஆயிரம் பாட்டிசைக்கும்
காற்றினில் இன்னிசையே பலர்
கேட்டதும் மெய் மறக்கும்
கண் வழி வந்து உள்ளத்தில்
மெல்லிசை என்னும் வெள்ளத்தில்
என்னுயிர் புது சொர்க்கத்தில்
என்னுடலொரு இன்பத்தில்
நீந்துது ஆனந்தத்தில்
பொன்னில் வானம்
போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை
காட்டுது ஜாலங்களே
காலையிலே சோலையிலே
கண்படும் வேளையிலே
பொன்னில் வானம்
போட்டது கோலங்களே
பிரம்மன் தூரிகை
காட்டுது ஜாலங்களே