Roja Poo Ondru |
---|
பாடலாசிரியர் : மதன் கார்கி
மயில் தோகை கொண்டே விசிறி தோழன் ஒருவன் மயங்கி விட்டானே காதல் மதுவை அருந்தி
திருக்கோவில் தீபம் எனவே தோழி கைத்தலம் பிடிக்க வந்தாளே தீயில் ஒளியை பொருந்தி
கடல் சேரும் நீலம் எனவே இசை சேரும் தாளம் எனவே மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர வானம் செந்தூரம் சூடும் மாலை நிலவும் உன் போலே எழுந்து மேகம் அணிந்து பாடும்
மாயம் புரிந்தாய் காற்றாய் நிறைந்தாய் உனக்கே பிறந்தாள் இதயம் திறந்தாள் நிலவாய் உன்னில் உதித்தாள் காதல் தடம் பதித்தாள்
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர வானம் செந்தூரம் சூடும்
தானாய் வந்ததொரு நந்தவனம் என் சொந்தவனம் நீதான் காலமெங்கும் என் வசந்தம் ஒரு பொன் வசந்தம்
தேன் மழை பொழியவா நான் அதில் நனையவா உயிரே உயிரில் இணையவா
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர வானம் செந்தூரம் சூடும் தனனம் தனனம் தனனம் தனனம் தனனம் தம்தனனம் தனனம் தம்தனனம்
காமன் கோவிலுக்குள் மோக மேதை அதில் ராஜ பூஜை மாமன் கைகளுக்குள் நூறு வித்தை நீ பஞ்சு மெத்தை
வேர்வையில் குளிக்கலாம் பார்வையில் துடைக்கலாம் உறவே இரவை பழிக்கலாம்
ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர வானம் செந்தூரம் சூடும் தேகம் இரண்டும் ராகங்கள் இசைக்க மேகம் சந்தங்கள் தூவும்
மாயம் புரிந்தாய் காற்றாய் நிறைந்தாய் உனக்கே பிறந்தாள் இதயம் திறந்தாள் நிலவாய் உன்னில் உதித்தாள் காதல் தடம் பதித்தாள்