Sammatham Solla Vanthal

Sammatham Solla Vanthal Song Lyrics In English


சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் தந்த நேரம் நல்ல நேரம் இளம் பாவை உந்தன் ஓரம்

சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் தந்த நேரம் நல்ல நேரம் இளம் பாவை எந்தன் ஓரம்

காவேரி ஓரம் பொன்மாலை நேரம் கண்ணே உன் கை சேர நான் தேடினேன் கண்ணா உன் தோளில் பூமாலையாக எப்போதும் நான் ஆடத்தான் வேண்டினேன்

மரகத வீணை மேனியில் அதிசய ராகம் மீட்டினேன் தினசரி உன்னை நாடினேன்

சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள்


குற்றாலச்சாரல் சிற்றாடை மீதில் பட்டாடும் போதென்ன ஆனந்தமோ சிற்றோடை ஒன்று வற்றாமல் இன்று ஊற்றாகப் பாய்கின்ற ஆரம்பமோ

இனம் அறியாத வேதனை தொடர்கதை ஆகிப்போனதே சுகமெனும் கீதம் பாடுதே

இன்றைக்கு காதல் நன்நாள் கண்ணன் உன்னுடன் சேரும் பொன்நாள் புது நாணம் அலை மோதும் இது போதும் போதும் போதும்

சம்மதம் சொல்ல வந்தாள் சிறு தாமரைப் பூவினை தந்தாள் தந்த நேரம் நல்ல நேரம் இளம் பாவை உந்தன் ஓரம்