Seer Mevum Gurupatham

Seer Mevum Gurupatham Song Lyrics In English


பாடகர்கள்  : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் என் எஸ் கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : ஜி ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கிளவுண் சுந்தரம்

சீர் மேவு குரு பதம் சிந்தையோடு வாய்க்கினும் சிரம் மீது வைத்து போற்றி ஜகமெல்லாம் மெச்ச ஜெயக்கொடி பறக்க விடும் வீரப் பிரதாபன் நானே சரி

சங்கத்துப் புலவர் பலர் தங்கத்தோடு பொற்பதக்கம் வங்கத்து பொன்னாடை பரிசளித்தார் எனக்கு இங்கில்லை ஈடென சொல்லிக் களித்தார்

இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி பங்கப்பட்ட பாராதீரர் சீரெழுத்து பாடி வாரேன் நானே அதற்கு ஓரெழுத்து பதில் சொல்லி பாரேன்

யானையை பிடித்துயானையை பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க ஆத்திரப் படுபவர் போல் அல்லவா

யானையை பிடித்து ஒரு பானைக்குள் அடைத்து வைக்க ஆத்திரப் படுபவர் போல் அல்லவா உமதாரம்பக் கவி சொல்லுதே புலவா

வீட்டின் பூனைக் குட்டி காட்டில் ஓடி புலியைப் பிடித்து தின்ன புறப்பட்டக் கதை போல் அல்லவா தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா

பூதானம் கன்னிகாதானம் சொர்ணதானம் அன்னதானம் கோதானம் உண்டு பற்பல தானங்கள் இதற்கு மேலான தானம் இருந்தால் சொல்லுங்கள்

கேள்விக்கு பதிலை கொண்டா உடைச்சி ஏறிவேன் ரெண்டா உன்னை ஜெயிச்சி கட்டுவேன் முண்டா அப்புறம் பறக்க விடுவேன் செண்டா ஜெயக்கொடி ஜெயக்கொடி பறக்குது ஜெயக்கொடி

சொல்றேன் எத்தனை தானம் தந்தாலும் எந்த லோகம் புகழ்ந்தாலும் தானத்தில் சிறந்தது நிதானந்தான் நிதானத்தனை இழந்தவர்க்கு ஈனந்தான்

சொல்லிட்டான் கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே

சிற்ப வேலைக்கு பெருமை உண்டு அதனாலே பாத்துக்கடா சரிதான்

அன்ன சத்திரம் இருப்பது எதனாலே


அன்ன சத்திரம் இருப்பது எதனாலே

பல திண்ணை தூங்கி பசங்கள் இருப்பதாலே எப்படி

பரதேசியாய் திரிவது எதனாலே பரதேசியாய் திரிவது எதனாலே

ம்ம்ம்அவன் பத்து வீட்டு சரி வேணாம் அவன் பத்து வீட்டு சோத்து ருசி கண்டதாலே

தம்பி இங்க கவனி காரிருள் சூழுவது எவ்விடத்திலே தம்பி காரிருள் சூழுவது எவ்விடத்திலே

கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே அண்ணே கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே

சொல்லிப்பிட்டியே

புகையும் நெருப்பிலாமல் எரிவதெது

புகையும் நெருப்பில்லாம அதெப்படி எரியும்

நான் சொல்லட்டுமா சொல்லு புகையும் நெருப்பிலாமல் எரிவதெது பசித்து வாடும் மக்கள் வயிறு அது

சரிதான் சரிதான் சரிதான்

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது

கத்திஇல்லகோடாரிஇல்லஈட்டிம்ஹூம் கடப்பாரைஇல்லைஅதுவுமில்லையா அப்புறம் பயங்கரமான ஆயுதம் அக்னி திராவமோ அது ஆயுதம் இல்லையே அட தெரிய மாட்டேங்குதேநீயே சொல்லப்பா

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது நிலைக் கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது ஆஹா ஆஹா நிலைக்கெட்டு போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது