Siraiyinil Veenai

Siraiyinil Veenai Song Lyrics In English


சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை இணைந்ததனாலே இனிய சங்கீதம்

சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை இணைந்ததனாலே இனிய சங்கீதம் மனம் மாறுமா துயர் தீருமா வழி சேருமா கூறம்மா பாடும் பாடல் கேட்டு பலவித பாவங்களோ

சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை இணைந்ததனாலே இனிய சங்கீதம்

நெஞ்சம் தேடுதோ நிழலுடன் விளையாடுதோ கொஞ்சும் பாடலை கேட்குதோ நெஞ்சம் தேடுதோ நிழலுடன் விளையாடுதோ கொஞ்சும் பாடலை கேட்குதோ

கல் தரை மீது நீந்துவதும் கானலில் கைகளை ஏந்துவதும் கல் தரை மீது நீந்துவதும் கானலில் கைகளை ஏந்துவதும்

மாறி வரும் வாழ்க்கையிலே இது ஒரு புதுவித அனுபவமோ

சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை இணைந்ததனாலே இனிய சங்கீதம்


மேகம் பாடுது மெல்ல வரும் அலை மோதுது யாரைத் தேடியோ ஓடுது மேகம் பாடுது மெல்ல வரும் அலை மோதுது யாரைத் தேடியோ ஓடுது

அலைகளும் கரையினை தழுவியதேன் தழுவிய அலைகளும் திரும்பியதேன் அலைகளும் கரையினை தழுவியதேன் தழுவிய அலைகளும் திரும்பியதேன்

முகில் வருமா மழை தருமா மறுபடி ஒரு துளி மழை விழுமா

சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை இணைந்ததனாலே இனிய சங்கீதம் மனம் மாறுமா துயர் தீருமா வழி சேருமா கூறம்மா பாடும் பாடல் கேட்டு பலவித பாவங்களோ

சிறையினில் வீணை சித்திரப் பூம்பாவை இணைந்ததனாலே இனிய சங்கீதம்