Tugalai Tugalai |
---|
துகளாய் துகளாய் உடைகிற இதயத்தை கைகளில் ஏந்திட யார் வருவார் துகளாய் துகளாய் உதிர்கிற பூமியை ஒன்றென இணைத்து யார் தருவார்
ஒன்றன் பின்னே ஒன்றெனவே துன்பம் என்னை தொடர்கிறதோ ஒரு துளி கண்ணீர் பிரியும் முன்னே மறு துளி கண்ணீர் துளிர்க்கிறதோ மறு துளி கண்ணீர் துளிர்க்கிறதோஓ
துகளாய் துகளாய் உடைகிற இதயத்தை கைகளில் ஏந்திட யார் வருவார் துகளாய் துகளாய் உதிர்கிற பூமியை ஒன்றென இணைத்து யார் தருவார்
நடிகையின் அழுகை புதியதில்லை என நினைத்தால் அவள் கடவுள் இல்லை மகிழ்ச்சிகள் எதுவுமே நிலைப்பதில்லை துயரங்கள் மட்டும் ஏன் முடிவதில்லை
ஏன் கொடுத்தாயோ பாழ் இடும்பை ஏன் அறுத்தாயோ யாழ் நரம்பை நொடியில் நொடியில் வாழ்வே முடிய முழுதாய் உலகே நொறுங்குவதோ முழுதாய் உலகே நொறுங்குவதோ
துகளாய் துகளாய் உடைகிற இதயத்தை கைகளில் ஏந்திட யார் வருவார் துகளாய் துகளாய் உதிர்கிற பூமியை