நதி எங்கே வளையும் பாடல் வரிகள்

Starring Ajith Kumar, Richa Ahuja
Movie Uyirodu Uyiraga
Music ByVidyasagar
Lyric By Vairamuthu
SingersGhanshyam Vaswani
Year 1998

Nathi Enge Valaiyum Song Lyrics In English

நதி எங்கே வளையும்
கரை ரெண்டும் அறியும்
மதி எங்கே அலையும்
ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும்
அது யாருக்கு தெரியும்

அதை அறிந்து சொல்லவும்
மதி இல்லை
மதி இருந்தால்
அதன் பேர் விதி இல்லை

நதி எங்கே வளையும்
கரை ரெண்டும் அறியும்

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோஷம் இல்லை

எட்டு நாள் வாழும் பட்டாம்பூச்சி
இறப்பை பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழவும் இல்லை


நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து
புன்னகை அணிந்து போரை நடத்து

கனவு காண்பது
கண்களின் உரிமை
கனவு கலைப்பது
காலத்தின் உரிமை

சிதைந்த கனவை
சேர்த்து சேர்த்து
அரண்மனை கட்டுதல்
அவரவர் திறமை

ஒவ்வொரு நொடியிலும்
உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை
நிறைந்த வாழ்வும்
நிலைத்திருந்தால்
வந்தது நிறைவது
வாழ்வின் கடமை

நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர் துளியை கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து
புன்னகை அணிந்து போரை நடத்து

Nathi Enge Valaiyum Song Lyrics from movie Uyirodu Uyiraga. Nathi Enge Valaiyum song sung by Ghanshyam Vaswani. Nathi Enge Valaiyum Song Composed by Vidyasagar. Nathi Enge Valaiyum Song Lyrics was Penned by Vairamuthu. Uyirodu Uyiraga movie cast Ajith Kumar, Richa Ahuja in the lead role actor and actress. Uyirodu Uyiraga movie released on 1998