Vaanthooral |
---|
வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே
விதையை புரட்டி போட்டாலும்
விண்ணை பார்த்து தான் முளைக்கும்
பேர் அன்பினால் வாழ்க்கையின்
கோணல்கள் நேர்படும்
பருவம் கடந்து போனாலும்
அருகம்புல்லு சாகாது
ஓர் தூரலில் மொத்தமாய்
பச்சையாய் மாறிடும்
வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே
ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
நிரிசனி தனிப மகமப
நிரிசனி தனிப மகமப
எங்கே சென்று வீழ்வதென்று
சிந்தும் மழை அறிந்ததில்லை
சொந்த பந்தம் யார் வசம் என்று
தேடும் உயிர் தெரிந்ததில்லை
மேகமற்ற வானத்தின் கீழே
தாகம்முற்ற பறவையை போலே
ஏதுமற்று பறந்த போதும்
நாடும் துணைகள்
ஈரப்பதம் காற்றில் இருந்தால்
தூரத்திலே காடு தெரிந்தால்
பக்கம் தானே நீர் நிலை என்று
பேசும் குரல்கள்
வான்தூரல் என் தோள்கள்
மேலே வாலாட்டும் நாளே
மெல்ல தானே சொல்லும் மாறும்
சொல்லி தானே சோகம் தீரும்
வாழும் ஆசை உள்ளபேர்க்கே
வாழ்க்கை என்றுமே இனிக்கும்
ஊனப்பட்ட ஜீவன் ஏதும்
பட்டினியால் சாவதில்லை
எங்கோ செல்லும் எறும்பு கூட
இரை கொடுக்கும்
மேகம் மட்டும் வானமில்லை
தேகம் மட்டும் வாழ்க்கையில்லை
புலன்களை கடந்து கூட
இன்பம் இருக்கும்
வான்தூரல் என் தோள்கள் மேலே
வாலாட்டும் நாளே
பேர் இருட்டில் என் கண்கள் மீதே
மின்னும் மின்மினியே