Vannakili |
---|
ஆஆஆ
வண்ணக்கிளி சூழ் கொண்ட
சின்ன கிளி வருக
வண்ணக்கிளி சூழ் கொண்ட
சின்ன கிளி வருக
வயிற்றுக்குள் வளர்கின்ற
வளர் பிறையே வருக
பூமிக்கு வருகின்ற
புது மலரே வருக
பூவுக்குள் வளர்கின்ற
புதையலே வருக
உயிருக்கு உயிர்தந்த
உத்தமியே வருக
பயிருக்கு பால் வார்க்கும்
பௌர்ணமியே வருக
வண்ணக்கிளி சூழ் கொண்ட
சின்ன கிளி வருக
வயிற்றுக்குள் வளர்கின்ற
வளர் பிறையே வருக
பூமிக்கு வருகின்ற
புது மலரே வருக
விண்மீனை மணமூட்டி
பூவாக்குங்கள்
வெற்றி மகள் கூந்தலுக்கு
பூச்சூடுங்கள்
மின்னல் சரம் எடுத்து
வலை செய்யுங்கள்
மின்னியலால் கை இரண்டில்
வலை சூடுங்கள்
விடி வெள்ளி எழுகையிலே
வெண்ணிலவு விழுகிறது
புது வெள்ளம் வருகையிலே
பழந் தண்ணீர் கழிகிறது
புது பூக்கள் மலர்கையிலே
சர்கெல்லாம் உதிர்கிறது
இது புரியாத வரைக்கும்தான்
நிம்மதியே இருக்கிறது
ஆஆஆ
ஆஆஆ
ஆஆஆ
ஆஆஆ
ஆஆஆ
காற்று வரும் நேரம் எது
குமிழுக்கு தெரிவதில்லை
கண்ணீர் வரும் நேரம் எது
கண்களுக்கு தெரிவதில்லை
பூ உதிரும் நேரம் எது
ஆ செடி கொடிகள் அறிவதில்லை
அதை அறிந்து கொண்டால்
அமைதி இல்லை
அறியும் வரை அவதி இல்லை