Yen Pen Endru

Yen Pen Endru Song Lyrics In English


ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய் ஏன் ஒரு பாதி
சிரித்தாய் என் உயிர் பூவை
எரித்தாய்

முதல் நாள்
பார்த்தாய் உறக்கம்
கெடுத்தாய் முறையா
என்றேன் கண்கள்
பறித்தாய் என் வலி தீர
ஒரு வழி என்ன என் பனிப்
பூவே மீண்டும் பார்த்தால்
என்ன

ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய்

நீ சூடும் ஒரு பூ
தந்தால் என் ஆஸ்தி
எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பேர்
சொன்னால் உன் காலடியில்
கிடப்பேன்

தூக்கத்தை
தொலைத்தேனே
துடிக்குது நெஞ்சம்

தலை போன
சேவல் போல் தவிக்குது
அங்கம் இரண்டில் ஒன்று
சொல்லிவிடு இல்லை நீயே
கொள்ளியிடு

ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய்


நோகாமல்
பிறர் காணாமல்
உந்தன் ஆடை நுனி
தொடுவேன் என்ன
ஆனாலும் உயிர்
போனாலும் ஒரு
தென்றல் என்றே
வருவேன்

நீ என்னைப்
பார்த்தால் தான்
துடிக்குது உள்ளம்
நீ என்னைப் பிரிந்தாலோ
உள்ளம் வெறும் பள்ளம்

இமயம் கேட்கும்
என் துடிப்பு ஏனோ உனக்குள்
கதவடைப்பு

ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய் ஏன் ஒரு பாதி
சிரித்தாய் என் உயிர் பூவை
எரித்தாய்

முதல் நாள்
பார்த்தாய் உறக்கம்
கெடுத்தாய் முறையா
என்றேன் கண்கள்
பறித்தாய் என் வலி தீர
ஒரு வழி என்ன என் பனிப்
பூவே மீண்டும் பார்த்தால்
என்ன

ஏன் பெண்ணென்று
பிறந்தாய் ஏன் என் கண்ணில்
விழுந்தாய்