En Mana Vaanil |
---|
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகல கலவென துள்ளி குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்
உங்களைப் போல சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன் சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
ஒரு பாட்டு போதுமோ எடுத்து கூறவே இதயம் தாங்குமோ நீ கூறு
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகல கலவென துள்ளி குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்
இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் மனிதரில்இதை யாரும் அறிவாரோ நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்டபாடே அன்றோ பூமியில்இதை யாரும் உணர்வாரோ
மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மர நிழல் நேசம் எதற்கும் நான் கலங்கியதில்லை
இங்கே ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக்கொள்வேன் என் நெஞ்சில் உண்மையுண்டு வேறென்ன வேண்டும்
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகல கலவென துள்ளி குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்
பொருளுக்காய் பாட்டை சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும் பாடினேன் அதை நாளும் நாளும் பொருளில்லா பாட்டானாலும் பொருளையே போட்டு செல்வார் போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
மனமுள்ளோர் என்னை பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன் மறந்திடா ராகம் இது தானே வாழ்க்கை எனும் மேடைதனில் நாடகங்கள் ஓராயிரம் பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றிஈ
என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே என் கதையை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடிக்கொள்ளும்
கலகல கலவென துள்ளி குதித்திடும் சின்னஞ்சிறு அலையே என் நிலையை கேட்டால் உங்கள் துள்ளலும் தானாய் அடங்கிவிடும்