இன்னிசை பாடி வரும் - சோகம் பாடல் வரிகள்

Starring Vijay, Simran
Movie Thulladha Manamum Thullum
Music ByS. A. Rajkumar
Lyric By Vairamuthu
SingersP. Unnikrishnan
Year 1999

Innisai Padi Varum (Sad) Song Lyrics In English

இன்னிசை பாடி வரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே

இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனது தொலைகிறதே

இன்னிசை பாடி வரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

இன்னிசை பாடி வரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை

கண் கொண்டு தன் கண்ணை
கண்டவர்கள் கிடையாது
என் கண்ணை காணுகிறேன்
இமை ரெண்டும் அசையாது


கண் கொண்டு தன் கண்ணை
கண்டவர்கள் கிடையாது
என் கண்ணை காணுகிறேன்
இமை ரெண்டும் அசையாது

குயில் இசை கேட்டவள்
இன்று குயில் முகம் பார்க்கிறாள்
உயிர் தொட்ட பாடலின்
முழு உருவத்தை பார்க்கிறாள்

தேடும் முன்பே வந்த பொருள்
வாழ்வில் நிலைப்பதில்லை
தேடி தேடி கண்ட பொருள்
எளிதில் தொலைவதில்லை

இசை பாட்டும் காற்றும்
சேர்ந்த பின்பு பிரிவதில்லை

இன்னிசை பாடகரே
இவள் விண்ணுயிர் கலந்து விட்டால்
மண்ணகம் உள்ள வரை
இவள் மனசுக்குள் வாழ்ந்திருப்பாள்

இன்னிசை பாடி வரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

Innisai Padi Varum (Sad) Song Lyrics from movie Thulladha Manamum Thullum. Innisai Padi Varum (Sad) song sung by P. Unnikrishnan. Innisai Padi Varum (Sad) Song Composed by S. A. Rajkumar. Innisai Padi Varum (Sad) Song Lyrics was Penned by Vairamuthu. Thulladha Manamum Thullum movie cast Vijay, Simran in the lead role actor and actress. Thulladha Manamum Thullum movie released on 1999