Nilladi Endradhu Solo

Nilladi Endradhu Solo Song Lyrics In English


நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு

நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு

நில்லடி என்றது உள்மனது

ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆ

சொல்லவா சொல்லவா
நான் நல்ல சேதி
பக்கம் வா வெட்கமே
நீ சரி பாதி

தாமதம் இன்னுமா
இது நல்ல நேரம்
நெருங்கினேன் மயங்கினேன்
மலை அருவி ஓரம்

கங்கைக்கரை ஓரம் வந்து
பாட்டு சொல்ல கூடாதா
மங்கை அந்த மாலைப் பொழுதில்
மயங்குவேனே தானாக
ஈருடல் இனி ஓருயிர்
என வாழப்போகும் நாளிலே


நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
நில்லடி என்றது உள்மனது

ஆஅஆஆஆஅ
ஆஅஆஆஆஅ
ஆஅஆஆஆஅ
ஆஅஆஆஆஅ

இருவிழி மலர்ந்தது
உன் முகம் காண
இடைவெளி ஆனது
இதற்காகத் தானா
வளர்வது வளர்ந்தது
நம் காதல் கீதம்
மன்னவா அருகில் வா
அது ஒன்று போதும்

கண்ணும் கண்ணும்
கலந்ததினாலே
கண்ணன் மனம் கவி பாட
இன்னும் இன்னும் வேண்டும் என்று
ராதை மனம் உனைத் தேட
ஒரு நாளிலே பல காலங்கள்
நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே

நில்லடி என்றது உள்மனது
செல்லடி என்றது பெண்மனது
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே
இரவெதற்கு