Thaayarum Ariyaamal

Thaayarum Ariyaamal Song Lyrics In English


ஹா ஹா
ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஹா ஹா
ஆஆ ஆஆ

தாயாரும் அறியாமல்
ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று
மலரும் என்னென்று
தெரியாமல் ஏதென்று
புரியாமல் பெண்நெஞ்சில்
பேர் அச்சம் பரவும்

பயம் போக சீராற்றி
பாலூற்றி நீராட்டி திருமேனி
மருதாணி இடுக உளுந்தாலே
கலி செய்து வெல்லங்கள்
தானிட்டு நல்லெண்ணெய்
தான் விட்டு தருக

பொண்ணோடு சீர்
கொண்டு வருக இந்த
பூவுக்கு புது சேலை புனைக
பொண்ணோடு சீர் கொண்டு
வருக இந்த பூவுக்கு புது
சேலை புனைக


இயற்கை தரும்
பூப்போடு இன்னுமொரு
பூப்பெய்தி வண்ண மலர்
குளம் வாழ வாழ்க
வாழ்க

தாயாரும் அறியாமல்
ஊராரும் காணாமல்
மொட்டொன்று பட்டென்று
மலரும் என்னென்று
தெரியாமல் ஏதென்று
புரியாமல் பெண்நெஞ்சில்
பேர் அச்சம் பரவும் ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ