Thendral Varum Theru |
---|
ஆஆஆஆஆஆஆ ஆஹஆஆஹ்ஆஅஆ
தென்றல் வரும் தெரு அது நீதானே திங்கள் தொடும் புது மலர் நீதானே கை வீசிடும் பூங்காவனம் கவிதை சொல்லும் கண்கள் தினம்
தென்றல் வரும் தெரு அது நீதானேஏ
பாடிய பாடல் உன்னைத் தேடுதே பாவையின் நெஞ்சில் தாளம் போடுதே காவியம் உந்தன் மீது பாடுதே காதலை எந்தன் நெஞ்சில் சூடுதே
மன்மதன் விழாவோ மன்னவன் உலாவோ வானமே சிறகாகும் வாழ்வெல்லாம் உறவாகும் தாழம் பூவை தாலாட்டியே
தென்றல் வரும் தெரு அது நீதானே திங்கள் தொடும் புது மலர் நீதானே கை வீசிடும் பூங்காவனம் கவிதை சொல்லும் கண்கள் தினம்
தென்றல் வரும் தெரு அது நான்தானோஓ
பூத்தது நெஞ்சில் உந்தன் பூ முகம் ஏழையின் வாழ்வில் இன்ப ஞாபகம் ஆயிரம் காலம் இங்கு மாறலாம் ஆசையும் அன்பும் நெஞ்சில் மாறுமோ
நீள் கடல் அலை வீசும் காதலின் கதை பேசும் நாயகன் வரும் நேரம் நாயகி துயர் தீரும் காதல் கோவில் நாம் காணலாம்
தென்றல் வரும் தெரு அது நான்தானோஓ திங்கள் தொடும் புது மலர் நீதானே கை வீசிடும் பூங்காவனம் கவிதை சொல்லும் கண்கள் தினம்
தென்றல் வரும் தெரு அது நான்தானோஓ தென்றல் வரும் தெரு அது நீதானேஏ